Home » » ஜார்ஜ் கோட்டை / தமிழ்நாடு செயலகத்தை Google Street View வில் சுற்றி பார்க்கலாம்

Embedded image permalinkGoogle ஒரே இரவில் நூற்றுக்கணக்கான Street view களை தமிழ் நாடு முழுவதும் வெளியிட்டது. மிக இரகசியமாக எவ்வித ஆரவாரமும் இன்றி வெளியாகிய இந்த காட்சிகள் உலகம் முழுவதிலுமே கணணிக்கல்லூரியில் தான் முதன் முதலில் வெளியாகிறது. தொடர்ந்தும் இந்திய - தமிழக சிறப்பு Street views கணணிக்கல்லூரியில் வெளியாகும். இதுவரை வெளியான Street views இங்கே காணலாம். தொழினுட்ப பிழைகள், கருத்துக்களுக்கு இங்கே வாருங்கள்.


புனித ஜார்ஜ் கோட்டை

புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George), இந்தியாவில் பிரித்தானியரின் முதலாவது கோட்டையாகும்.பிரான்சிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் என்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் முயற்சியால் 1639 ஆம் ஆண்டில் கரையோர நகரான மதராசில் (இன்றைய சென்னை நகரம்) கட்டத் தொடங்கப்பட்டது. வெறுமனே கிடந்த இப் பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால், புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இன்றைய சென்னை நகரம் இக் கோட்டையைச் சுற்றியே உருவானது எனக் கூற முடியும்.


1640 முதல் தற்காலம் வரை இக்கோட்டையின் உட்பகுதியில் பல கட்டடங்கள் எழுந்துள்ளன. ஆங்கில ஆளுநர்களின் தலைமையிடமாக விளங்கிய இக்கோட்டைப் பகுதியில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக அலுவலகங்கள், அமைச்சர் அலுவலகங்கள், சட்டமன்றங்கள் ஆகியவை உள்ளன. கோட்டைக்கு உள்ளே வர மூன்று வாயில்கள் உள்ளன. கோட்டையைச் சுற்றி அகழி உள்ளதை இன்றும் காணலாம்.