அஜந்தா குகைகள் என்பவை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புத்த மத சிற்பங்களும் ஓவியங்களும் காணப்படும், குகைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில்கள் ஆகும். மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் இருந்து 107km தொலைவில் உள்ள அழகான கிராமம் அஜந்தா. இங்கிருந்து 12km தொலைவில் காணப்படும் குடைவரைக்-கோவில்களும், ஓவியங்களும் அமைந்துள்ள இடம் கிராமத்தின் பெயரால் அஜந்தா குகைகள் என அழைக்கப்படுகின்றன.
![](https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/30/Indischer_Maler_des_6._Jahrhunderts_001.jpg/581px-Indischer_Maler_des_6._Jahrhunderts_001.jpg)
எலிபண்டா குகைகள், மும்பாய் கரைக்கு அப்பால், மும்பாய்த் துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள Gharapuri தீவில் அமைந்துள்ளன. போத்துக்கீசர் இத்தீவுக்கு எலிபண்டாத் தீவு எனப் பெயரிட்டனர். 1987 ஆம் ஆண்டில் இக் குகைகள் UNESCO உலக பண்பாட்டுக் களம் என அறிவிக்கப்பட்டது.
இங்குள்ள சிற்பங்களைத் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு இலக்காகப்
போத்துக்கீசர் பயன்படுத்தியதனால் பல சிற்பங்கள் சிதைக்கப்பட்டு உள்ளன.
கீழே வழக்கம் போல கணணிக்கல்லூரியின் சிறப்பு HTML5 Street view இல் அனைத்து இடங்களையும் சுற்றி பாருங்கள்...